300 ஆசிரியர்களுக்கு தேசிய விருது - துணை ஜனாதிபதி வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிட்டத்தட்ட 300 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவின்போது தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கெளரவித்தார்.
வழக்கமாக தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர்தான் வழங்குவார். 1958ம் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது முதலே இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் அவருக்குப் பதில் துணைக் குடியரசுத் தலைவர் அன்சாரி விருதுகளை வழங்கினார்.
நாடு முழுவதிலிமிருந்து 300 ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில்...
இதேபோல தமிழகத்தில், 358 ஆசிரிய, ஆசிரியைகள் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications