நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வேலைமுடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்ணை, மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து நேற்று இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார்.
அவர் மணிமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து முத்தமழை பொழிந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் வாலிபரின் பிடியில் இருந்து திமிர முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அருகிலிருந்தவர்களை காப்பாற்றுமாறு கூறி கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பக்கமாக போனவர்கள் வாலிபரின் பிடியில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அப்போது தனது பெயர் ராதாகிருஷ்ணன் என்றும் போலீஸ் ஜஜி என்று கூறி போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் கல்லாக்குழி, இப்போது வெட்டுக் கோணத்தில் இருக்கிறேன். தச்சு தொழில் செய்து வருகிறேன். இப்போது ஜஜி பதவி தருகிறேன் என்று கூறி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக எஸ்பி என்னை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். பணி ஆர்டர் இன்னும் கைக்கு வரவில்லை. வந்தபின் உங்களை கவனித்துக் கொள்கிறேன் எனறார். அதன் பின்னர் தான் போலீசாருக்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அதற்கு மேல் அவரிடம் விசாரணை நடத்தாமல் அவர் கூறிய முகவரிக்கு தகவல் தெரிவித்தனர். ராதாகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் மனைவி வங்கியில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. ராதாகிருஷ்ணன் கடந்த சில காலமாக இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications