தமிழர்களுக்காக மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்-இலங்கை அமைச்சர்
கொடைக்கானல்: இலங்கை தமிழர்களுக்காக இல்லாவிட்டாலும், இந்திய பூர்வீக தமிழர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொடைக்கானல் வந்துள்ள அவர் கூறுகையில்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன் வந்துள்ளனர்.
மேலும், வாலிபால், கால்பந்து, விளையாட்டில் ஆர்வமிக்க வீரர்கள் இலங்கையில் இருக்கின்றனர். அவர்கள் முறையான பயிற்சி பெறுவதற்கு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்காக இல்லாவிட்டாலும், இந்திய பூர்வீக தமிழர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசு குரல்கொடுக்க முன்வர வேண்டும்.
இலங்கையில் உள்ள 20 லட்சம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications