சர்ச் அனாதை இல்லத்தில் 2 பெண்கள் கற்பழிப்பு- பாதிரியார் கைது
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சர்ச் வளாகத்தில் உள்ள அனாதை இல்லத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கற்பழித்த குற்றத்திற்காக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீஞ்சூரை அடுத்த வேலூர் கிராமத்தில் சத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அனாதை இல்லம் உள்ளது. இதை சாது இமானுவேல் என்ற பாதிரியார் நடத்தி வந்தார். 1988-ம் ஆண்டு முதல் இந்த அனாதை இல்லம் செயல்பட்டு வருகிறது.
இந்த இல்லத்தில் முன்பு வசித்து வந்தவர் கீதா. இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இல்லத்தை விட்டு வெளியேறினார். பாதிரியார் சாது இமானுவேல் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்டதால் கீதா வெளியேறியதாக தெரிகிறது.
இருப்பினும் அவ்வப்போது இங்கு வந்து இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவது கீதாவின் வழக்கம்.
அதுபோல சமீபத்தில் அவர் வந்தபோது அவரை அணுகிய இரண்டு பெண்கள், தங்களை பாதிரியார் இமானுவேல் பாலியல் ரீதியாக மிகுந்த தொந்தரவுகள் செய்து வருவதாகவும், இருவரையும் அவர் கற்பழித்து விட்டதாகவும் கூறி கதறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கீதா, உடனடியாக ஜஸ்ட் டிரஸ்ட் என்ற என்ஜிஓ அமைப்பைத் தொடர்பு கொண்டார்.
அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
மாவட்ட எஸ்.பி. சாரங்கனிடம் புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இல்லத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பாதிரியாரைக் கைது செய்தனர்.
மேலும் இல்லத்தில் தங்கியிருந்தவர்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் எஸ்.பி. சாரங்கன் கூறுகையில், சாது இமானுவேல் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.
மேலும் அதில் ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன்பு செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.
தனது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் இல்லத்தில் உள்ள பெண்களை ஈடுபடுத்தி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வது அவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
சர்ச்சுக்குள்ளும் கூட இந்த மாதிரியான வேலைகளை அவர் செய்து வந்துள்ளார்.
அந்த இல்லத்தில் தங்கியிருந்த எட்டு இளம் பெண்கள் மற்றும் 2 சிறுவர்களை மீட்டுள்ளோம்.
கடந்த 25 ஆண்டுகளாக இந்த சர்ச்சையும், அறக்கட்டளையையும் அவர் நடத்தி வருகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
கற்பழிப்புப் புகார் கொடுத்த இரு பெண்களும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனாதை இல்லம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications