ஸ்வைன்-மகா. மேலும் மூவர் பலி-இந்தியாவில் 138
டெல்லி: மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 138 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மகாராஷ்டிராவில் பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலியாகி இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஆனால், பலியான அந்த மூன்று பேரின் பேர் மற்றும் விபரங்கள் குறிப்பிடபடவில்லை.
இதையடுத்து இங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இந்திய அளவில் 138 ஆக உயர்ந்துள்ளது.
5 ஆயிரத்தை தாண்டியது...
இந்நிலையில் நேற்று மேலும் 245 பேருக்கு இந்த நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை (5,221) தாண்டியுள்ளது.
இதில் 38 குழந்தைகள் உட்பட 84 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள். டெல்லியில் இதுவரை 994 பேருக்கு இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை தவிர்த்து தமிழகத்தில் 38, ஹரியானாவில் 27, உத்தர பிரதேசத்தில் 22 மற்றும் கர்நாடகாவில் 17 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் 3,491 பேர் பலி...
உலகம் முழுவதும் இந்த காய்ச்சலுக்கு சுமார் 3,491 பேர் பலியாகியுள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு அதிகபட்சமாக பிரேசிலில் 769 பேர் இறந்துள்ளனர். இங்கு நேற்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 595, அர்ஜென்டினாவில் 512 மற்றும் மெக்சிகோவில் 207, ஆஸ்திரேலியாவில் 162 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications