நியூசிலாந்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.5 ஆகவும், 4.9 ஆகவும் பதிவாகியுள்ளது.
நியூசிலாந்தின் பியர்லாந்து தீவு பகுதியின் இன்று அதிகாலை சுமார் 8.55 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது.
இது டீ அனவ் நகருக்கு 90 கிமீ., மேற்கே சுமார் 5 கிமீ., ஆழத்தில் பதிவாகியுள்ளது. இதன் பாதிப்புகளை குயின்ஸ்டவுன் நகர மக்களும் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்துக்கு முன்பாக அங்குள்ள வெள்ளை தீவுக்கு வட கிழக்கே 680 கிமீ., தொலைவில் உள்ள பிளன்டி வளைகுடா பகுதியில் 6.5 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால், இது சுமார் 420 கிமீ., ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எதுவும் உருவாகவில்லை. இது நேற்று இரவு சுமார் 10.32 மணிக்கு நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்க அலைகளை நியூசிலாந்துன் வட தீவில் இருந்தவர்களும் உணர்ந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications