மும்பை தாராவியில் உள்ள 7000 குடிசைகள் ரூ. 700 கோடிக்கு விற்பனை

சமீபத்தில் மும்பையின் கபே பரேடில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ரூ. 25 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தாராவிப் பகுதி குடிசைகள் திடீரென பெரும் விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளன.
இதற்குக் காரணம் - ரூ. 15,000 கோடியில் தாராவிப் பகுதி நவீனமாகவுள்ளதே.
590 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தாராவிப் பகுதியை மேம்படுத்தி அதி நவீனமாக மாற்ற புனேவைச் சேர்ந்த மாஷால் என்ற என்.ஜி.ஓ. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இங்குள்ள குடிசைகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இதுவரை 7000 குடிசைகள் விற்றுள்ளனவாம். ரூ. 700 கோடி என்ற பெரும் தொகைக்கு இவை விற்பனையாகியுள்ளன.
ஒவ்வொரு குடிசையும் 120 முதல் 200 சதுர அடி அளவே உள்ளது. இந்த அளவுக்கு உள்ள குடிசைகள் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை விலை போகின்றனவாம்.
அதுவே 150 சதுர அடி உள்ள கடைகளாக இருந்தால் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை விலை போகின்றனவாம்.
குடிசைகளை வாங்குவோரில் பெரும்பாலானோர் தனி நபர்களாகவே உள்ளனர். இருப்பினும் தனி நபர்கள் என்ற போர்வையில் சில ரியல் எஸ்டேட் புள்ளிகளும் கூட குடிசைகளை வாங்கிப் போட்டு வருகின்றனராம்.
ஆனால் இப்படி குடிசைகளை வாங்குவோருக்கு எந்தப் பலனும் இருக்காது என்று கூறப்படுகிறது. காரணம், உண்மையான குடிசைவாசிகளுக்கு ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நபர்களுக்குத்தான் குடிசைப் பகுதி நவீனமயமாக்கலில் இடம் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையே தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் இன்னொரு என்ரான் திட்டமாக மாறக் கூடிய அபாயம் இருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
தாராவி திட்டத்தை ஏற்கனவே அரசு 2 முறை தள்ளிப் போட்டுள்ளது. இந்த நிலையில், மறுபடியும் எப்போது திட்டம் அமலுக்கு வரும் என்பது தெரியாத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையி்ல பெரும் விலைக்கு பலர் குடிசைகளை வாங்கிப் போட ஆரம்பித்திருப்பதால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications