For Daily Alerts
Just In
பழனி: 14ஐ கற்பழித்த 67க்கு 7 ஆண்டு சிறை
பழனி: பழனி அருகே 14 வயது மாணவியை கற்பழித்த 67 வயது காம கொடூரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் பச்சைமுத்து (67). இவர் கடந்த 2004ம் ஆண்டு தனது வீட்டருகே குடியிருந்த 14 வயதான மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை கற்பழித்தார்.
அந்த சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் பச்சைமுத்துவை கைது செய்து, விசராணை நடத்தினர். விசாரணையில் அவர் உண்மையை ஒப்புகொண்டார்.
தற்போது இந்த வழக்கு பழனி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில்,
பச்சைமுத்துவுக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். அபராத தொகை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்படும் என்றார்.
Comments
Story first published: Friday, September 11, 2009, 14:25 [IST]