தங்கை காதலால் ஆத்திரம்-விஷம் தந்து வாலிபரை கொன்ற ராணுவ வீரர்
நெல்லை: நெல்லை அருகே இளம் பெண்ணை காதலித்தவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 4 பேர் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
மானூர் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் களக்குடியை சேர்ந்த கோமுவின் மகளை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வெறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆததிரமடைந்த கோமுவின் மகன் ராணுவ வீரரான மாரியப்பன், தாய்மாமா அய்யாத்துரை உள்பட 5 பேர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஆறுமுகத்திற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தனர்.
பின்னர் ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரப்பினர்.
ஆனால், இந்த சாவில் சந்தேகமடைந்த ஆறுமுகத்தின் உறவினர்களில் சிலர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ்பி ஆஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் டிஎஸ்பி நாகராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குப்புசாமி, எஸ்ஐ சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தி அய்யாத்துரை, மாரியப்பன், இவரது நண்பர்கள் கந்தசாமி, சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் பல தற்கொலை வழக்குகள் மறுவிசாரணை செய்யப்பட்டு அதில் 5 வழக்குகள் கொலை வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எஸ்பி ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது போன்று சீவலப்பேரி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், விக்கிரமசிங்கபுரம், ஆகிய பகுதிகளில் நடந்த தற்கொலைகளை மறு விசாரணை நடத்தி 5 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications