பல்லடம்-போலீஸ் வேனை சிறைபிடித்த பெண்கள்!
Subscribe to Oneindia Tamil
பல்லடம்: பல்லடம் அருகே போலீஸ் வேனை பெண்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம் அருகே சின்னக்கரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சமாதானப் பேச்சு நடத்தி, சாலை மறியலை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், குடிநீர் பிரச்சனைக்கு முடிவு தெரியாதவரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறியதால், சாலை மறியலில் ஈடுபட்ட ஆண்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களுடன் கிளம்பிய போலீஸ் வேனை புறப்பட விடாமல் அப்பகுதி பெண்கள் சிறை பிடித்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் வேனை மீட்க அதிரடிப்படையுடனருடன் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications