குஜராத் போலி என்கெளண்டர்கள் குறித்து டாகுமெண்டரி!
டெல்லி: குஜராத்திதில் நடந்த போலி என்கௌண்டர்கள் தொடர்பான டாகுமென்டரியை நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சி இன்று இரவு ஒளிபரப்பவுள்ளது.
“Encountered on Saffron Agenda?" என்ற தலைப்பிலான இந்த டாகுமென்டரியை பிரபல பத்திரிக்கையாளரும், டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.
சொராபுதீன், இஷ்ரத் ஜகான் உள்பட முக்கியமான 4 போலி என்கௌண்டர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு (13ம் தேதி) 8:00 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் முதல் ஒரு மணி நேரம் டாகுமென்டரி படமும், அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் போலி என்கௌண்டர்கள் குறித்த விவாதமும் நடக்கும்.
இஸ்ரத் ஜகான் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு போலி என்கௌண்டர் என உறுதிபடுத்தியுள்ள அகமதாபாத் நீதிமன்றம், அம் மாநில அரசிடம் பதவி உயர்வு பெறுவதற்காக சில காவல்துறை அதிகாரிகள் நடத்திய நாடகம் இது என்று கூறியுள்ளது குறி்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications