கஜகஸ்தான் மருத்துவமனையில் தீ-38 பேர் பலி
அல்மாட்டி: கஜ்கஸ்தான் நாட்டின் டால்டிகோர்கன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 38 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் நடந்த மருத்துவமனையில் சுமார் 40 போதை பழக்கத்துக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள், புது வாழ்க்கை பெற தங்கியிருந்தனர். அவர்களில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக தெரிகிறது.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து கஜகஸ்தான் பிரதமர் கரீம் மஷிமோவ் இந்த விபத்து குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இப்பகுதிக்கு ஒபியம், ஹெராயின் உள்ளிட்ட போதை வஸ்துகள் கடத்தப்படுகின்றன. மேலும், அந்நாட்டிலே கேன்னபிஸ் என்ற போதை பொருள் அதிகம் பயிரிடப்படுகிறது.
இதனால் சுமார் 1.6 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் சுமார் 55 ஆயிரம் போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அரசு போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.