ஜெட் ஸ்ட்ரைக்-நஷ்டம் ரூ.200 கோடி
நாளொன்றுக்கு 24000 பயணிகள் இந்த விமானங்களில் பயணித்து வந்தனர். இதன் மூலம் தினசரி ரூ.40 கோடியை சராசரி வருவாயாகப் பெற்று வந்தது இந்நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் 1000 பைலட்டுகள் பணியில் இருந்தனர். இவர்களில் 4 பைலட்டுகளை நிர்வாகம் நீக்கியதால் கொதித்தெழுந்த பைலட்டுகள், ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்வதாகக் கூறி பணிகளைப் புறக்கணிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போனது.
கிட்டத்தட்ட 300 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன. பல ஆயிரம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
5 நாள் இழுபறிக்குப் பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விமானிகளின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், அனைவரும் பணிக்குத் திரும்பினர்.
விமானங்கள் இப்போது இயங்குகின்றன. இந்த 5 நாள் ஸ்ட்ரைக்கால் 200 கோடி ரூபாயை இழந்துள்ளது ஜெட் ஏர்வேஸ்.
மேலும் தங்களது பயணிகளில் 60 சதவிகிதத்தினரை மாற்று விமான நிறுவனங்கள் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளது இந்நிறுவனம்.
இத்தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரோஜ் தத்தா தெரிவித்தார்.