எஸ்பிஐ ஏடிஎம்கள் சேட்டிலைட் மூலம் ஒருங்கிணைப்பு!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டு வாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இதற்கான பொறுப்பு ஹியூஸ் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்கள் உள்ள அனைத்து மையங்களிலும் 2,880 வி-சாட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் அல்லாத பிற இடங்களில் உள்ள ஏடிஎம்களை ஒருங்கிணைக்க முடியும்.
இந்தப் பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ. 22.5 கோடியாகும். ஏடிஎம்களை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் தொடர்பை நிர்வகிப்பது ஆகியன இதில் அடங்கும்.
வங்கியின் மத்திய தகவல் தொகுப்புடன் இந்த வி-சாட் தொடர்பு இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் தொகுப்பு மையம் சுனாமி, பெரும்மழை போன்ற பேரழிவு இடர்பாடுகளின்போதும்கூட பாதிப்புக்குள்ளாகாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications