இவுங்க எல்லாரும் மாறிட்டாங்க...!

சென்னையி்ல் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவம் அடங்கிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிட சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி.
இதற்காக அவர் சாதாரண வகுப்பில் பயணித்தார். மத்திய அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கையாக நட்சத்திர ஹோட்டல்களி்ல் தங்கக் கூடாது, விமானங்களில் பிஸினஸ் கிளாசி்ல் பயணிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியிருந்தார்.
இதையேற்று பல அமைச்சர்கள் தங்களது டெல்லி நட்சத்திர ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டனர். சாதாரண வகுப்பில் பறக்க ஆரம்பித்துள்ளனர்.
சோனியாவும்...
சிக்கன நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தார்.
மகாராஷ்டிரத்தி்ல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வந்த அவர் தனி விமானத்தை யன்படுத்தாமல் டெல்லியிலிருந்து மும்பைக்கு பயணிகள் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தார்.
ரயிலில் சிறப்பு வகுப்பை புறக்கணிக்கும் ராகுல்:
அதே போல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் ரயிலில் சிறப்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு சாதாரண வகுப்பில் பயணிக்கவுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் முகாமை தொடங்கி வைக்க இன்று லூதியானா செல்லும் ராகுல், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண இருக்கை உள்ள பெட்டியிலேயே பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிறப்பு வகுப்பு வேண்டாமென்று மறுத்து விட்டார்.
இந்த வரிசையில் தேசிய அடையாள அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நீலேகணியும் சேர்ந்துள்ளார். அவரும் அரசு செலவில் தான் தங்கியிருக்கும் ஓபராய் ஹோட்டலை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் ஓபராய் ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு கர்நாடக பவனில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications