ஆஸி-3 இந்தியர்கள் மீது 70 பேர் கும்பல் மீண்டும் தாக்குதல்

அவர்கள் சுக்தீப் சிங்(26), அவரது சகோதரர் குர்தீர் சிங் மற்றும் அவரது உறவினர் முக்தையர் சிங் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் மூவரும் மெல்போர்னின் கிழக்கு பகுதியான எப்பிங்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது கடந்த 12ம் தேதி சில ஆஸ்திரேலியர்களால் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காயமடைந்தவர்களின் உறவினரான ஆன்கர் சிங் கூறுகையில்,
அவர்கள் மூவரும் அன்று காலை 11.00 மணி அளவில் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட 70 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது.
அவர்கள் அமைதியாக தான் விளையாடியுள்ளனர். ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை கேலி செய்து வம்புக்கு இழுத்துள்ளனர். அப்போது அவர்கள் பொறுமையாக இருந்துள்ளனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை பார்த்து உங்கள் நாட்டுக்கு ஓடி போ என கூறியுள்ளனர். அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு காரில் செல்ல முயன்ற போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.
அவர்கள் 13 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த விஷயம் தொடர்பாக அந்த 70 பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு பிரதிநிதிகள் இந்தியா வந்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணாவை சந்தித்தனர். அப்போது இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவெறி தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications