இந்தியர்கள் மீதான தாக்குதலை மறைக்க முயன்ற ஆஸி.!
மெல்போர்ன்: மெல்போர்னில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை ஆஸ்திரேலிய போலீஸ் மூடிமறைக்க முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்திய அரசு தலையிட்டு பேசியது. இதையடுத்து ஆஸ்திரேலியா இந்தியர்கள் தாக்கப்படமாட்டார்கள் என உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதம காலமாக இந்தியர்கள் மீது எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 12ம் தேதி மேற்கு மெல்போர்ன் பகுதியான எப்பிங்கில் கார் பார்க்கிங் பகுதியில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.
அவர்களில் சுக்தீப் சிங் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரது சகோதரர் குர்தீப் சிங்கின் தாடையும், அவர்களது உறவினர் முக்தையார் சிங்கின் தோள்பட்டையும் உடைபட்டுள்ளது.
சுமார் 70 பேர் சேர்ந்து ஒட்டுமொத்தமாக தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் வெளியே வந்தால் வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற பயத்தில் இதை மறைக்க ஆஸ்திரேலிய போலீஸார் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெல்போர்னை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கிளன் பார்கர் கூறுகையில்,
போலீஸார் விரைந்து சென்று நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
அதை மூடிமறைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அப்போது அதை ஒரு பெரிய சம்பவமாக நாங்கள் கருதவில்லை. இது தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக தான் இது தொடர்பாக மீடியா அதிக ஆர்வத்துடன் எழுதி வருகிறது. எப்பிங் பகுதிகளில் இது போன்று நடப்பது மிகவும் அரிதானது என்றார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications