For Daily Alerts
Just In
தீவிரவாதம்: நியூயார்க்கில் வீடு வீடாக போலீஸ் சோதனை
இந்த தகவலை நியூயார்க் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் மார்டி் ஸ்பீச்லே கூறுகையில்,
சில வீடுகளில் சோதனை செய்தோம். இதை எப்பிஐ தான் செய்தது. நாங்கள் அவருக்கு உதவினோம். இப்பகுதியில் அல்-கொய்தா இயக்கத்தினர் சிலர் நடமாடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவர்களது முயற்சியை தடுக்க இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த கும்பலை பிடிப்பதற்காக இந்த தேடுதல் வேட்டைக்கு வாரண்ட் கேட்டு நேற்று இரவு எப்பிஐ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
நியூயார்க் நகர செனட்டர் ஷக் ஷூமர் கூறுகையில்,
யாரும் எந்த திட்டமும் போடவில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அல்-கொய்தாவுடன் தொடர்பு உள்ளவர்களை கைது செய்ய முயற்சித்தோம். இந்த விஷயத்தில் போலீஸார்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றார்.
Comments
Story first published: Wednesday, September 16, 2009, 10:38 [IST]