பாலி குண்டுவெடிப்பு-இந்தோனேசியா-4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: பாலி மற்றம் ஜகார்த்தா குண்டு வெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட நூர்தின் முகமது என்ற அதிபயங்கர தீவிரவாதியை இந்தோனேசிய கமாண்டோ படையினர் சுட்டு கொன்றனர்.

மலேசியாவில் பிறந்து ஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த அவர் கடந்த 2005ல் அல்-கொய்தா அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிரிவு தலைவராக அறிவிக்கப்பட்டார்.

41 வயதான அவர் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் இருந்து பிரிந்து தன்ஷிம் கொய்தத் அல்-ஜிகாத் என்ற தீவிரவாத இயக்கத்தை துவக்கினார்.

இது குறித்து அந்நாட்டின் தேசிய போலீஸ் கமாண்டர் ஜெனரல் பாம்பேங் ஹென்டர்சோ தனுரி கூறுகையில், நூர்தின் சுட்டு கொல்லப்பட்டது உண்மை தான் என்றார்.

இது குறித்து மேலும் தகவலுக்காக மேஜர் ஜெனரல் நானன் சோயகர்னாவை சந்தித்த போது,

இந்த அதிரடி தாக்குதல் நேற்று இரவு துவக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்ய பெற்றுள்ளன.

ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நூர்தின் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் பிடிபட்டனர். இந்த தாக்குதலில் ஒரு கமாண்டோ வீரர் காயமடைந்தார்.

கடந்த மாதம் இதேபோல் நடத்தப்பட்ட தாக்குதலில் நூர்தின் தப்பித்துவிட்டான். அவனுடைய கூட்டாளியை ஒருவனை மட்டுமே கொல்ல முடிந்தது. இம்முறை இதில் வெற்றி பெற்றோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+