For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்பிஐ...விவசாயிகளுக்கு வறட்சிக் கால சலுகை!

By Staff
Google Oneindia Tamil News

Drought
சென்னை: வறட்சி பாதித்த மாநில விவசாயிகளுக்கு சிறப்புச் சலுகை வழங்குகிறது பாரத ஸ்டேட் வங்கி.

இதன்படி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நீர்ப்பாசனக் கடன்கள் போன்றவற்றுக்கு கணிசமான வட்டிக் குறைப்பு தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக வழங்கப்படும் ரூ.25 லட்சம் வரையிலான சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கான வட்டி விகிதம் முதல் ஒரு ஆண்டுக்கு 8 சதவீதமாகவும், இரண்டாம் மூன்றாம் ஆண்டுக்கு 9 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.

இச்சலுகை மார்ச் 2010 முடிய புதியதாக வழங்கப்படும் சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கு மட்டும் பொருந்தும்.

சிறிய நீர்ப்பாசன கடன்களுக்கான குறைந்தபட்ச விளிம்புத் தொகை 15-20 சதவீதத்திலிருந்து திட்ட முதலீட்டில் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதியதாகப் பெறும் கடனை திருப்பிச் செலுத்தும் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. கடன் வழங்கலுக்கான பிராஸஸிங் கட்டணம் பாதியாக (50 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓராண்டுக்கு மட்டும், ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களுக்கு வட்டி விகிதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2010 வரை அனுமதிக்கப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும், என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X