தென்காசி எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
தென்காசி இலவச காஸ் அடுப்பு கேட்டு தென்காசி எம்எல்ஏ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு இலவச கலர் டிவி, வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க வேண்டும், அது வரை யாருக்கும் இலவச கலர் டிவி வழங்ககூடாது என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் தென்காசி நகராட்சி பகுதியில் இலவச கலர் டிவி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலருக்கு வேண்டியவருக்கு மட்டும்தான் காஸ் அடுப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்கபடவில்லை என்று கூறி 2வது வார்டு, 3வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் நூற்றுக்கணக்கானோர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்காக வரும் வழியில் தென்காசி நகராட்சி தலைவர் கோமதிநாயகம் வருவதைப் பார்த்த பெண்கள் ஆவேசத்துடன் அவரை முற்றுகையிட்டு தங்களுக்கு இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications