இந்தியாவை அல்-கொய்தா தாக்கலாம்: இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

ஜெரூசலம்: பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இயக்கம் ஒன்று மும்பை தாக்குதல் போல் இந்தியா முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என இஸ்ரேல் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினரை தான் அவர்கள் அதிகம் குறிவைத்தனர்.

மும்பைத் தாக்குதலில் 6 இஸ்ரேலியர்கள் பலியானார்கள்.

இந்நிலையில் இஸ்ரேலின் தீவிரவாத தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தீவிரவாத இயக்கங்கள் மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் இந்தியா முழுவதும் குறிப்பாக மேற்கு கடற்கரை மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும்.

இதனால் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இஸ்ரேலியர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கையை சாதாரணமாக கருதிவிட வேண்டாம்.

அவர்கள் ஜன நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கும், சுற்றுலா ஸ்தலங்களுக்கும் செல்ல வேண்டும். துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு இல்லாத பகுதி மற்றும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு போக வேண்டாம் என்றார்.

இந்தியாவில் பல இடங்களில் இருக்கும் வசிக்கும் யூதர்கள், இஸ்ரேலிய புத்தாண்டான ரோஷ் ஹஸ்னாவைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+