பில்டர்களுக்கு ஆர்பிஐ அதிரடி உத்தரவு!
இதன்படி இனி அனைத்து ப்ரமோட்டர்கள் மற்றும் பில்டர்களும் தாங்கள் கட்டும் வீடுகள் அல்லது கட்டடங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதாவது அந்த கட்டடத்தின் மீது அவர்கள் பெறும் வங்கிக் கடன் உள்பட.
ஒரு வாடிக்கையர் தனக்கான ப்ளாட் அல்லது ஃப்ளாட்டை யாரிடம் வாங்கலாம் என முடிவு செய்துகொள்ள இது மிக வாசதியாக இருக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009 மே வரை இந்தியாவில் உள்ள பல்வேறு புரமோட்டர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை ரூ. 94,499 கோடி. மொத்தம் நிலுவையாக உள்ள வங்கிக் கடனோ ரூ. 2.75 லட்சம் கோடி.
எனவே பல வாடிக்கையர் தங்களையும் அறியாமல் பில்டர்களின் கடன்களைச் சுமக்கும் நிலை. எனவே அனைத்து பில்டர்களும் வாங்கியுள்ள கடன் பற்றிய விவரங்கள், அந்தக் கடன் வாங்கப்பட்ட சொத்துக்களின் விவரங்களையும் வெளியிட ரிசர்வ் வங்கி, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் வங்கிகளும் இதில் அடங்கும்.
இதன் மூலம் தாங்கள் வாங்கிய வீடு அல்லது நிலம் மீது பில்டர் கடன் வைத்திருக்கும் நிலை இருந்தால், அதைக் கட்டி முடிக்க வாடிக்கையரே பில்டருக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. வங்கி வழங்கிய கடனும் சரியாக திரும்பக் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் இந்த புதிய உத்தரவு என கூறப்படுகிறது.