ஈரோடு-தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் தொழிலதிபர் வீட்டில் 70 பவுன் நகை மற்றும் பொருட்கள் மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச் சென்றனர்.

ஈரோடு சம்பத் நகர் அருகே சஞ்சய் நகரை சேர்ந்தவர் நந்தகுமார். வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள விசு அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றார்.

இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவு நேகரத்தில் நந்தகுமார் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர்.

அப்பார்ட்மென்டில் குடியிருப்போர் காலை வழக்கம்போல் எழுந்து பார்த்த போது, நந்தகுமார் வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேதகம் அடைந்த அவர்கள் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர் நந்தகுமார் இல்லாததால் நேற்று காலையில் இருந்து இரவு வரை போலீஸார் விசாரணை நடத்தமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெறுவது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+