For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீன ஊடுறுவல் அதிகரிக்கவில்லை-ராணுவ தளபதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறு. அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த தீபக் கபூர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சீனாவின் அத்துமீறல்கள் அதிகரிக்கவில்லை. மேலும், இதில் கவலைப்படும்படியான சூழ்நிலையும் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பிரதமரே தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சீனத் தரப்பிலிருந்து ஊடுறுவல்கள் அதிகரிக்கவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது.

பாகிஸ்தானின் சண்டை நிறுத்த மீறல்களுக்கு இந்திய ராணுவம் பொருத்தமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.

குளிர்காலத்திற்கு முன்பாகவே இந்தியாவுக்குள் பெருமளவில் ஊடுறுவி விட வேண்டும் என பாகி்ஸ்தான் தீவிரவாதிகள் முயன்று வருகின்றனர். இதற்கான முயற்சிகள்தான் தற்போது ஜம்மு, காஷ்மீரில் நடந்து வருகிறது. ஆனால் அதை முறியடிக்க படைகள் தயாராகவே உள்ளன என்றார் கபூர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X