நவம்பர் முதல் தமிழகத்தில் 3-ஜி சேவை துவக்கம் !
மதுரை:தமிழக மாவட்டங்களில் 3 -ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவை நவம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் பி.எஸ்.என்.எல்- நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கோவை உட்பட முக்கிய மாவட்டங்களில் 3-ஜி சேவை நவம்பர் இறுதிக்குள் செயல்படுக்கு வரும்.
3-ஜி சேவை இந்த ஆண்டு துவக்கத்தில் தமிழகத்தில் 11 நகரங்களில் அறிமுகம் ஆக உள்ளது.
தமிழக மாவட்ட தலைநகரங்களுக்கு இச் சேவையை எடுத்துச் செல்ல, இன்னும் 2-3 மாதங்கள் பிடிக்கும். இந்த சேவை தற்போது நகர அளவிலேயே உள்ளது . கிராமங்களுக்கு விரிவு படுத்தப்படவில்லை.
3-ஜி சிம்கார்டுக்கு ரூ.300 கட்டணம் என பிஎஸ்என்எல் நிர்ணயம் செய்துள்ளது. ப்ரீ-பெய்டு திட்டம் ரூ 350 - முதல் ரூ.1350 வரை உள்ளது.
போஸ்ட் பெய்டு திட்டத்தில் ரூ 500 முதல் ரூ 2,500 வரை உள்ளது என தெரிய வருகின்றது.
மேலும், தனியார் மொபைல் ஆப ரேட்டர்கள் இச் சேவையை செயல்படுத்த ஒரு ஆண்டு ஆகும் என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications