ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் தற்கொலை
மெல்போர்ன்: வேலை கிடைக்காத விரக்தியில் இந்திய மாணவர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெயர் குர்ஜிந்தர் சிஹ். 20 வயதுகளில் இருக்கும் அவர் 3 மாதங்களுக்கு முன்பு லா டிராப் பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார்.
வேலை பார்த்துக் கொண்டே படிக்க விரும்பிய அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்தார் அவர். இந்த நிலையில் மெல்போர்ன் நகரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிங்கின் குடும்பத்தினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சம்மேளனத்தின் நிறுவனர் கெளதம் குப்தா கூறுகையில், இது விரக்தியின் வெளிப்பாடு. இங்குள்ள அரசு நிர்வாக, கல்வி அமைப்புகள் சரியில்லை என்பதையே இது காட்டுகிறது.
விக்டோரியா மாகாண முதல்வர் ஜான் பிரம்பிதான் இந்த மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications