தருமபுரி மருத்துவ கல்லூரி-25ல் 3ம் கட்ட கவுன்சிலிங்
சென்னை: தருமபுரி, மதுராந்தகம் மருத்துவ கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான மூன்றாம் கட்ட மருத்துவ கவுனிசிலிங் வரும் 25 மற்றும் 26ம் தேதி சென்னையில் நடக்கிறது.
முதல் இரண்டு கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற நினைத்தால் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் அதற்கான சான்றிதழ் பெற்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலிங் கட் ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கிறது.
25ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் காலை 9 மணிக்கு துவங்குகிறது. இதில் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருக்கம் 85 இடங்கள் மற்றும் சமீபத்தில் துவக்கப்பட்ட மதுராந்தகம் கற்பக விநாயகா மருத்துவ கல்லூரியில் உள்ள 65 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
சென்னை பாரிமுனை பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
மறுநாள் 26ம் தேதி கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் உள்ள 15, பெருந்துறை ஐஆர்டி மருத்துவ கல்லூரியில் 7, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி கல்லூரியில் 2, குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் 4 என மொத்தம் 28 இடங்களுக்கு சேர்க்கை நடைபெற இருக்கிறது.