ரஜினி, விஜயை நம்பி காங். இல்லை-இளங்கோவன்

சமீபத்தில் நடிகர் விஜய், ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப்பயணத்தின் போது அவர் காங்கிரஸில் சேருவார் என கூறப்பட்டது.
இந்நிலையி்ல சென்னை வந்த ராகுல் காந்தி ரஜினிக்கும் காங்கிரஸில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால், ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரும் ஆசையில்லை என கூறி நைசாக கழண்டுவிட்டார். அதேபோல் சில பல காரணங்களால் விஜய்யும் இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என ஒதுக்கி கொண்டார்.
மேலும், எதிர்பார்த்ததை போல் இளைஞர் காங்கிரஸிலும் யாரும் சேரவில்லை. இதையடுத்து ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸாருக்கு டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளங்கோவன் கூறுகையில்,
ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப் பயணத்தால் மற்ற கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இந்த சுற்றுப்பயணம் தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என்பதை உணர்த்திவிட்டது.
டெல்லியில் ராகுல் காந்தி, நடிகர் விஜயை சந்தித்து பேசியதாக சில செய்திகள் வந்துள்ளன. இது உண்மை இல்லை. விஜயை ராகுல் சந்திக்கவில்லை. விஜய் தான் தன்னை சந்திக்க நேரம் ஒதுக்கும் படி ராகுலிடம் கேட்டு கொண்டார்.
இந்த சந்திப்பு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடவும் இல்லை, ஒதுக்கவும் இல்லை. ரஜினி ஆனாலும், விஜய் ஆனாலும் அவர்கள் முதலில் இந்திய குடிமக்கள். அதன் பிறகு தான் நடிகர்கள்.
எந்த நடிகர்களையும் நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. கட்சியின் கொள்கையில் விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் காங்கிரஸில் சேரலாம் என்றார்.












Click it and Unblock the Notifications