For Daily Alerts
Just In
சென்னை யுஎஸ் தூதரகம்-போலி பட்டதாரி கைது
சென்னை: எம்பிஏ படித்துள்ளதாக அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்து விசா கோரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மஸ்தான் வலி ஷேக் (27). விசா கோரி சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
நேற்று நேர்முக தேர்விற்கு ஆஜரானார். பிளஸ்2 வரை படித்துள்ள இவர், எம்.பி.ஏ படித்தாக ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இவரது ஆவணங்கள் போலி என்பதை அறிந்த தூதரக அதிகாரிகள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து மஸ்தான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
Comments
Story first published: Wednesday, September 23, 2009, 10:51 [IST]