லாலு திடீர் பல்டி-காங்கிரஸ் மீது தாக்கு

அடுத்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த தேர்தலில் இங்கு காங்கிரஸூடன் கூட்டணி வைத்திருந்த சிபு சோரன் இம்முறை தனித்து போட்டியிடும் முடிவில் இருக்கிறார்.
இதையடுத்து லாலு, ஜார்க்கண்டில் காங்கிரஸ் முதுகில் ஏறி 4 சீட்டாவது பிடித்துவிட வேண்டும் என நினைத்தார். இதையடுத்து காங்கிரஸை கூட்டணியை விட்டு எப்போதும் விலகமாட்டேன். சோனியாவுக்கு நான் கட்டுப்பட்டவன் என ஆஹா, ஓகோ என்றார்.
ஆனால், காங்கிரஸ் அவரை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து லாலு அப்படியே தனது கொள்கையை மாற்றி கொண்டுள்ளார்.
நேற்று பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பல்வாரியாவுக்கு சென்று கோவிலில் வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அடிப்படை பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதை காங்கிரஸால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான திறமை தங்களுக்கு இல்லை என்பதை காங்கிரஸ் காட்டிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications