13 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர்-காங்.
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸில் சுமார் 13 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தை அடுத்து தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ்க்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. விரைவி்ல் தேர்தல் நடக்கவிருக்கிறது. இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் உஷா நாயுடு, சுரஜ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அவர்கள் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறுகையில்,
இளைஞர் காங்கிரஸ்க்கு கடந்த ஆகஸ்டு 20ம் தேதியில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். நேற்று மாலை 7 மணியுடன் உறுப்பினர் சேர்க்கை முடிந்தது.
இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து விரைவில் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கான தேதியை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அதை பின்னர் வெளியிடுவோம்.
பஞ்சாயத்து, நகராட்சி, சட்டமன்ற தொகுதி வாரியாக படிப்படியாக தேர்தல்கள் நடத்தப்படும். எத்தனை லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்று எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications