யுஎஸ்-60 மாடி கட்டிடத்தை தகர்க்க முயன்ற அல்-கொய்தா தீவிரவாதி கைது
டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள 60 மாடி உயர கட்டிடத்தை தகர்க்க முயன்ற அல்-கொய்தா தீவிரவாதியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜோர்டனை சேர்ந்த 19 வயதான அந்த தீவிரவாதியின் பெயர் ஹோசம் மஹர் ஹூசைன் ஸிமாடி. அவர் இன்டர்நெட்டில் தீவிரவாதிகளின் இணையத்தில் சாட் செய்து கொண்டிருந்த போது போலீஸார் அவனது திட்டம் குறித்து அறிந்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவம் எப்பிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஸிமாடி அமெரிக்காவுக்குள் சட்டப்பூர்வ அனுமதி பெற்று வரவில்லை. கள்ளத்தனமாக நுழைந்துள்ளான். அவன் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் உள்ள 60 மாடி பவுன்டைன் ஆபிஸ் டவர் கட்டிடத்தின் அடியில் ஒரு வாகனம் நிறைய குண்டுகளை நிரப்பி அதை தகர்க்க முயன்றுள்ளான்.
அவன் ஆன்-லைனில் ஒரு தீவிரவாத குழுவுடன் தொடர்பு வைத்திருந்த அவன் எப்பிஐ பார்வையில் பட்டான். அந்த குழுவில் இருந்தவர்கள் பலரும் தீவிரவாதத்தை ஆதரித்து கருத்துக்கள் கூறியிருந்தாலும், ஸிமாடி அளவுக்கு யாரும் வெறிபிடித்தவனை போல் கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும், அவன் பல இடங்களில் அமெரிக்காவை தாக்க வேண்டும் என கூறியுள்ளான்.
இதையடுத்து அமெரிக்க ரகசிய போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை தொடர்பு கொண்டு தான் அல்-கொய்தாவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்தி கொண்டார். அவனுடன் பல மாதங்கள் பழகிய அந்த அதிகாரி, ஸிமாடியின் செயல்கள் அமெரிக்காவுக்கு பெரிய மிரட்டலாக மாறலாம் என்பதை அவர் உறுதி செய்து கொண்டார்.
ஸிமாடி தனது தீவிரவாத திட்டத்துக்கு பல இடங்களை தேர்வு செய்திருக்கிறான். அவன் வெல்ஸ் பார்கோ வங்கியிருக்கும் அந்த 60 மாடி கட்டிடத்தை தேர்வு செய்யும் முன் டல்லாஸ் போர்த் வொர்த் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான்.
இந்த 60 மாடி கட்டிடத்தை தாக்கினால் பொருளாதார நெருக்கடியால் திணறும் அமெரிக்காவின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும். இந்த நகரின் முக்கிய வங்கியும் அதில் இருப்பதால் அமெரிக்காவுக்கு பலத்த இழப்பு ஏற்படும் என அவன் அந்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.
மேலும், இணையத்தில் அவன் தான் ஒசாமா பின் லேடனின் படை வீரன் என்றும், தீவிரமான ஜிகாத்தே நல்லது எனவும் அவன் எழுதியிருந்தான்.
அவன், மாறுவேடத்தில் இருந்த ரகசிய போலீஸ் அதிகாரியிடம் செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்த இருந்ததாகவும், ஆனால் ரமலான் மாதம் என்பதால் அந்த திட்டத்தை செப்டம்பர் 20ம் தேதிக்கு மாற்றி வைப்பதாகவும் தெரிவி்த்துள்ளார்.
இதையடுத்து அந்த ரகசிய போலீஸ் அவரிடம் வெடிகுண்டு என போலியான வெடிபொருட்களை கொடுத்துள்ளார். மேலும், அந்த வெடிபொருட்களை வைத்துவிட்டு செல்போனை டையல் செய்தால் அது வெடிக்கும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய அவன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அந்த வாகனத்தை கட்டிடத்தின் தரை தளத்தில் கொண்டு சென்று நிறுத்தினான். பின்னர் அவன் செல்போனை டையல் செய்தான். இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். அப்போது தான் அவன் போலீஸ் சூழ்ச்சியில் வசமாக மாட்டி கொண்டது தெரியவந்தது என்றார்.
அவன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கிறான். அவனுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications