சொத்து-அமைச்சர் சுரேஷ்ராஜன் மனு தள்ளுபடி
நாகர்கோவில்: வருமானத்துக்கு அதிகமான வகையில் சொத்து குவித்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அமைச்சர் சுரேஷ்ராஜன் தாக்கல் செய்திருந்த மனுவை, நாகர்கோவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமானத்துக்கு அதிகமான வகையில் ரூ. 17 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக சுறறுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த 2002 - ம் ஆண்டு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 4.7.2003 ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் விடுவிக்கக் கோரி நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் சுரேஷ்ராஜன் தரப்பில் கடந்த 6 மாதத்துக்கு முன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரை சண்முகம், அதை தள்ளுபடி செய்ததுடன், குற்றத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதனையுடத்து, இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.