நீ ஒரு அதிசய ராமன் .. கருணாநிதிக்கு ஜெகத் பாராட்டு
சென்னை: நீயோர் அதிசய ராமன் அதனால் தான் ஒவ்வொரு முறையும் தாடகையை வதம் செய்கிறாய்! உன்னை நன்றாக புரிந்து கொண்டது திருமதி தான்; நிரந்தர முதல்வன் நீ என்பது நிச்சயமாய் தெரிந்ததால்தான் தேர்தல் களத்திற்கே அவர் வருவதில்லை என்று கருணாநிதியைப் பாராட்டுவது போல ஜெயலலிதாவை சாடியுள்ளார் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன்.
அண்ணா விருது பெறும் முதல்வர் கருணாநிதிக்கு ஜெகத்ரட்சகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து வசனக்-கவிதை:
உலகத் தமிழர்களின் ஒற்றைத் தலைவனே! திக்கெட்டும் ஒலிக்கட்டும்- உன் முரசு! தேர்ச் சக்கரத்தில் உலகை வலம் வருகிறான், ஒரு சூரியன்; சக்கர நாற்காலியில் சுழலும் ஒரு சூரியனை உலகமே வலம் வருகிறது!
நீயோர் அதிசய ராமன் அதனால் தான் ஒவ்வொரு முறையும் தாடகையை வதம் செய்கிறாய்! உன்னை நன்றாக புரிந்து கொண்டது திருமதி தான்; நிரந்தர முதல்வன் நீ என்பது நிச்சயமாய் தெரிந்ததால்தான் தேர்தல் களத்திற்கே அவர் வருவதில்லை!
குண்டர்களை வளர்த்ததால் தொலைந்தே போனார்கள்..
நீ தொண்டர்களை வளர்த்ததால் தான் தலைவன் ஆனாய்; மறவர்கள் குண்டர்களை வளர்த்ததால் தொலைந்தே போனார்கள்! உன் விரல்கள் எத்தனை இலக்கியங்களைப் படைத்தால் என்ன? தொண்டர்களின் தவம் உடன்பிறப்பே' எனும் ஒற்றைச் சொல்லுக்காகத் தான்!
மொழிக்காக பெற்ற காயங்களும் இனத்திற்காகப் பெற்ற தழும்புகளும் தாம் உன் வாழ்க்கை- தலைவா!
உன் தழும்புகளுக்காகவே தந்துவிடலாம், எத்தனை முறை வேண்டுமானாலும், தமிழ்நாட்டை!
ஒற்றை விரலைக் காட்டி, அண்ணா சிலையாக நிற்பதன் ரகசியம் என்ன தெரியுமா? தனக்கும் பிறகு தமிழினத்தின் ஒரே தலைவன், நீ தான் என்பதை சூசகமாகச் சொல்வதற்கு அல்லவா?
காற்றைத் தழுவி ஏறும் நம் கட்சிக்கொடி கூட, தியாகம் நிரம்பிய உன் தேகம் தான்! கட்சிக்கொடியின் கறுப்பு என்பது உன் வியர்வை; சிவப்பு என்பது உன் உதிரம்!
சங்கத் தமிழ் ஈன்ற- எங்கள் தங்கத் தலைவனே! இந்தியா பெற்றெடுத்த இன்னுமொரு இமயமே!
தமிழனின் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைத் தம் வாழ்வென்னும் மைதொட்டு எழுதிவரும் எழிலுருவே!
இந்தியாவின் இதயத்தில் திராவிடத் துடிப்பினை இயக்கி வைத்த இயக்கமே! உன் எழுத்து இறுகிக் கிடந்த தமிழினத்தின் இமைகளைத் திறந்தது- உன் பேச்சு, பூட்டிக்கிடந்த ஊமைத் தமிழனின் உதடுகளைத் திறந்தது! உன் அரசியல், இருண்டு கிடந்த ஏழைத்தமிழனின் விடியலைத் திறந்தது!
பிள்ளைகளை பெற்ற தலைவர்கள் பலர் தரணியில் உண்டு! ஆனால், தலைவர்களை பெற்ற தலைமகன் நீ மட்டுந்தான்! காலம் நின்றுவிட்ட காவியப் பேரறிஞரின் கனவுகளுக்கு உயிர் தந்த கலைஞரே!
ஈரோட்டு நெருப்பெடுத்து காஞ்சி தீபம் ஏற்றி குவலயத்துக்குக் காட்டிய திருக்குவளை கலங்கரை விளக்கமே! அண்ணா விருது காணும் எங்கள் அண்ணலே! சாதிக்கப் பிறந்த சரித்திரம் நீ- நாங்கள் உன் சாதனைகளைப் பாடப் பிறந்த சாமான்யப் புத்திரர்கள்!
வேங்கடத்தானை வேண்டுகிறேன்...
அண்ணா விருது மட்டுமல்ல! அண்ணாந்து பார்த்தால் விண்வரைத் தென்படும் விருதுகள் அனைத்தும் உன் வாசலுக்கு வந்து பல்லாண்டுப் பாட, வேங்கடத்தானை வேண்டுகிறேன்! வாழ்க! பல்லாண்டு என்று கூறியுள்ளார் ஜெகத்ரட்சகன்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications