போரின்போது இந்தியாவில் பிறந்த ஈழ அகதிக் குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்த அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை அளிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்கவுள்ளது.

இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் மன்னார் மற்றும் வவுனியாவில் இரண்டு முகாம்கள் நடைபெறவுள்ளன. அப்போது இந்த 400க்கும் மேற்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கை அரசின் சட்டப்படி குடியுரிமைச் சான்றிதழ் இருந்தால்தான் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். அது இருந்தால்தான் இலங்கைக் குடிமகனாக அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.

ஆனால், இலங்கையில் போர் ஓய்ந்த நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பல அகதிகளுக்கு, இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சான்றிதழ் இல்லை. இதனால் அவர்களால் இலங்கை கல்வித்துறை நடத்தும் பள்ளித் தேர்வு உள்ளிட்டவற்றில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்தே 400 குழந்தைகளுக்கு இலங்கைக் குடியுரிமையை வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+