தமிழகத்தில் சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டம்- இன்று விஜயதசமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு பூஜைகள் செய்தும், புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து வணங்கியும் மக்கள் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடினர்.
அதேபோல தொழிற்சாலைகளில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட சென்னையின் தொழிற்பேட்டைகள் இதையொட்டி களை கட்டியிருந்தன.
ஆயுத பூஜையையொட்டி நேற்று தொழிலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இதேபோல புதுச்சேரியிலும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்கூடங்களில் பூஜைகள் போடப்பட்டன.
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கல்வி நிறுவனங்களில் இன்று சிறப்பு மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications