ராகுல் காந்திக்கு விடுதலைப் புலிகளால் மிரட்டல் - உளவுத்துறை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டாலும் கூட, எஞ்சியிருக்கும் புலிகளால், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாம்.
ராகுல் காந்திக்கும், சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கம் நாட்டிலேயே உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மிரட்டல் காரணமாகவே, சமீபத்தில் தமிழகம் வந்திருந்தபோது சாலை மார்க்கமாக ராகுல் காந்தி பயணிக்கவில்லை. மாறாக ஹெலிகாப்டர்களை அதிகம் பயன்படுத்தினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிடமிருந்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிக மிரட்டல் உள்ளதாம்.
ஆனால் தனது பாதுகாப்பு மிரட்டலைப் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி மேற்கொள்ளும் திடீர் பயணங்களால் பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறதாம்.
சமீபத்தில் உ.பி. வந்த ராகுல் காந்தி, யாருக்கும் தெரியாமல், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தலித் குடியிருப்புக்கு விஜயம் செய்தார். அங்குள்ள தலித் வீடு ஒன்றில் தங்கினார். அங்கேயே இரவைக் கழித்தார். சாப்பிட்டார், அவர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கினார். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடினார். அங்கேயே குளிக்கவும் செய்துள்ளார்.
ராகுலின் இந்தப் பயணத்திற்கு மாயாவதி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவ்வாறு ராகுல் காந்தி நடந்து கொண்டால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட முடியாது என்றும் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இதேபோல கடந்த ஆண்டு நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள ஒரிசாவுக்குச் சென்ற ராகுல் காந்தி, பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல், பழங்குடியினர் கிராமத்திற்குச் சென்று அங்கு இரவைக் கழித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இனிமேல் தமிழகத்திற்கு அடிக்கடி வருவேன் என்று கூறியிருந்தார் ராகுல் காந்தி. எனவே இனி அவர் அடிக்கடி தமிழகம் வரக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக போலீஸாருக்கும், உளவுப் பிரிவினருக்கும் பணி கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications