பிறந்த குழந்தையை கொன்ற தாய்-தாமிரபரணியில் வீசினார்
நெல்லை: திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கரையில் பிறந்த சில மணி நேரத்திலே குழந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய தாயை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றாங்கரையில் ஒரு குழந்தை பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், லட்சுமி பிரபா, கோபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அதற்கு அருகிலேயே ஒரு குழந்தை பெற்ற தடையங்களும் காணப்பட்டது.
இதனால் இரவு அந்த இடத்தில் யாராவது ஒரு பெண்ணுக்கு பிரவசம் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த குழந்தையின் தாயே அதை கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தொப்புள் கொடி கூட அறுக்காத அந்த குழந்தையின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.
கள்ளக்காதல் அல்லது திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட தவறான உறவு காரணமாக அந்த குழந்தை பிறந்திருக்கலாம், தனது தவறை மறைக்க அந்த தாய் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications