For Daily Alerts
Just In
இளம் விஞ்ஞானி சக்திவேல் கடலூரில் மரணம்
கடலூர்: கடலூரில், தமிழக இளம் விஞ்ஞானி சக்திவேல் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த மணக்குடியான் இருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல் (30).
பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் இளம் விஞ்ஞானியாக கடந்த ஐந்தாண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.
ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான மணக்குடியான் இருப்பு கிராமத்திற்கு வந்த சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால், அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவ மனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
Comments
Story first published: Tuesday, September 29, 2009, 12:36 [IST]