பெனாசிர் கொலை-முஷராபுக்கு பாக். கோர்ட் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: மறைந்த பாகிஸ்தான் பிரதமர் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் அதிபர் முஷராப் உள்ளிட்ட 10 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி இஸ்லாமாபாத் அருகே படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷராப் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் மீது எப்ஐஆர் பதிய வேண்டும் என புட்டோவின் வெளியுறவு அதிகாரி சௌதாரி அஸ்லாம் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தின் லாகூர் கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இஜாஸ் அகமது சௌதாரி இம்மாதம் முதல் தேதி முஷராப், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பாபர் அவான், பஞ்சாப் முதல்வர் பெர்வேஷ் இலாகி ஆகியோர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கினார்.

ஆனால், தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் முஷராப் இதற்கு சரியான பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+