தேர்தலில் மகன் போட்டி-ஜனாதிபதி படத்தை நீக்க கோரிக்கை
அமராவதி: மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜனாதிபதி பிரதிபா பாடீலின் மகன் தேர்தலில் போட்டியிடுவதால், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதீபா பாட்டீலின் படத்தை நீக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என அம்மாநில அமைச்சர் ஒருவர் போர் கொடி உயர்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஜனாதிபதியின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவாத் அமராவதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், மாநில அமைச்சருமான சுனில் தேஷ்முக் என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் போட்டி வேட்பாளராக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீபாவின் மகனை வீழ்த்த வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதில் முதல் வேளையாக அமராவதி தொகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களில் இருக்கும் அவரது படத்தை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர்,
தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி ஒரு வேட்பாளர்களுக்கு ஆதரவான எந்த பொருட்களும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட கூடாது. இதனால் வேட்பாளர் ராஜேந்திர சிங் ஷெகாவத்தின் தாயாரான ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் படத்தை நீக்க வேண்டும்.
பொது மக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் இருக்கும் பிரதீபாவின் படங்களை பார்த்து மக்கள் அவரது மகனுக்கு ஓட்டு போட்டும் வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications