தேர்தலில் மகன் போட்டி-ஜனாதிபதி படத்தை நீக்க கோரிக்கை
அமராவதி: மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜனாதிபதி பிரதிபா பாடீலின் மகன் தேர்தலில் போட்டியிடுவதால், அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதீபா பாட்டீலின் படத்தை நீக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என அம்மாநில அமைச்சர் ஒருவர் போர் கொடி உயர்த்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் ஜனாதிபதியின் மகன் ராஜேந்திர சிங் ஷெகாவாத் அமராவதி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இதையடுத்து அத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், மாநில அமைச்சருமான சுனில் தேஷ்முக் என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் போட்டி வேட்பாளராக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதீபாவின் மகனை வீழ்த்த வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதில் முதல் வேளையாக அமராவதி தொகுதியில் இருக்கும் அரசு அலுவலகங்களில் இருக்கும் அவரது படத்தை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர்,
தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி ஒரு வேட்பாளர்களுக்கு ஆதரவான எந்த பொருட்களும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட கூடாது. இதனால் வேட்பாளர் ராஜேந்திர சிங் ஷெகாவத்தின் தாயாரான ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் படத்தை நீக்க வேண்டும்.
பொது மக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் இருக்கும் பிரதீபாவின் படங்களை பார்த்து மக்கள் அவரது மகனுக்கு ஓட்டு போட்டும் வாய்ப்புள்ளது என்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications