இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை-சாமி எதிர்ப்பு
டெல்லி: தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் திட்டம் அபாயகரமானது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மிச்சம் மீதி இருப்பவர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் இதுபோன்று பேசியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு புகலிடம் ஏற்படுத்தித் தர முயலுகிறார் கருணாநிதி.
தமிழ் அகதிகளை இங்கேயே நிரந்தரமாக தங்க வைத்து, குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருணாநிதியின் சட்டவிரோத கோரிக்கைக்குக்கு மத்திய அரசு இணங்குமானால் அதை எதிர்த்து நான் கோர்ட்டுகளுக்குப் போக வேண்டி வரும்.
இத்தாலியில் வசிக்கும் வங்காளிகள் துர்கா பூஜையைக் கொண்டாட விடாமல் அந்த நாட்டு அரசு தடுத்துள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் சாமி.