For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சமாவோ தீவில் மீண்டும் நிலநடுக்கம்-சுனாமி இல்லை

Google Oneindia Tamil News

லியோன்: சமாவோ தீவில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.

சமாவோ தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின.

இதுவரை 111 பேர் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82 பேர் சமாவோ தீவில் பலியாயினர். 22 பேர் அருகே உள்ள அமெரிக்கன் சமாவோ தீவிலும், 7 பேர் டோங்கா தீவிலும் மரணமடைந்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

சுனாமியில் சிக்கி உயிர்பிழைத்த ஒருவர் கூறுகையில், எனது வீட்டை இழந்துவிட்டேன். காரை பறிகொடுத்துவிட்டேன். பணத்தை இழந்துவிட்டேன். எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் நான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

இந்நிலையில் நேற்று மாலை 6.13 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இது 5.5 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டுள்ளது. சமாவோ தீவில் இருந்து 194 கிமீ தொலைவில், 10 கிமீ ஆழத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது.

இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X