டெல்லியில் இலங்கை தூதரகம் மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தூதரகத்தின் மீது கற்களை வீசித் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் கட்டடத்தின் சில கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன.
இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு கோரி இலங்கைத் தூதரகம் டெல்லி போலீஸை நாடியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் புதிய தமிழகம் பேரணி:
இந் நிலையில் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான புதிய தமிழகம் தொண்டர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்:
இலங்கையில் முள்வேலி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களை உடனடியாகத் தங்கள் சொந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்த இலங்கை அரசை நிர்பந்திக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னையில் மெமோரியல் ஹால் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications