அணை: கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை-தமிழகம்
சென்னை: முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கேரளாவுக்கு மத்திய அரசு
இன்று வரை எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் பிறப்பிக்கவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முல்லை பெரியாறு பிரச்சினையில் புதிய அணை கட்ட மத்திய அரசு கேரள அரசுக்கு ஆய்வு செய்ய அனுமதி கொடுத்து விட்டதாக ஒரு செய்தியும், இதை மறுத்து மற்றொரு செய்தியும் மாறி மாறி ஏடுகளில் வெளிவந்த நிலையில் இதுபற்றி ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசைப் பொறுத்த வரையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நாம் நம்முடைய எதிர்ப்பை மத்திய அரசிற்கும் தெரிவித்திருக்கிறோம். நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையிலே உள்ளது.
இன்று வரையில் மத்திய அரசின் சார்பாக எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை.
இவ்வாறு மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் இல்லாத நிலையில் சிலர் கூறுவதை போல உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற எந்தவிதத்திலும் இயலாது.
மத்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமான உத்தரவு கேரள அரசுக்கு ஆதரவாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று யாராவது எடுத்துக் காட்டினால், தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications