காந்தி சிலைக்கு மாலை அணிவித்துத் திரும்புகையில் தங்கபாலு காலில் சுளுக்கு
சென்னை: மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத் திரும்புகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் காலில் சுளுக்கு ஏற்பட்டது.
நேற்று காந்தி ஜெயந்தியாகும். இதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மாலை அணிவிப்பு நடந்தது.
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் தங்கபாலு, அவர் கிண்டி காமராஜர் மணிமண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தக் கிளம்பினார்.
அப்போது, காந்தி சிலை அருகில் பிளாட்பாரத்தில் இருந்து சாலையில் கீழே இறங்கும் போது கால் பிசகியது. இதனால் அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கூட்டிச் சென்றனர்.
காலைப் பரிசோதித்த டாக்டர்கள், இது சாதாரண சுளுக்குதான், 2 நாள் ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தெரிவித்தனர்.
இதனால் காமராஜர் மணி மண்டபம் உள்ளி்ட்ட எந்த நிகழ்ச்சியிலும் தங்கபாலு கலந்து கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications