மீண்டும் குலுங்கியது இந்தோனேசியா-6.1 ரிக்டர் நிலநடுக்கம்
பசிபிக் ரிங் ஆப் பயர் எனப்படும் பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள் புதிதல்ல. ஆனால் சமீப காலமாக கிட்டத்தட்ட தினசரி பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 30ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்நிலையி்ல் இன்று காலை சுமார் 9.06 மணிக்கு இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் மேற்கு பபூவா மாகாண தலைநகர் மனோக்வரி நகரில் இருந்து வடமேற்கே 128 கிமீ தூரத்தில், சுமார் 39 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
இது இந்தோனேசிய புவியியல் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் சுகர்ஜோனோ கூறுகையில்,
சேதம் குறித்து உடனடி தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலநடுக்கத்துக்கு சுமத்ராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரண்டு வேறு வேறு கண்ட தட்டுக்களில் உள்ளன என்றார்.