புழல் சிறைக்கு குண்டு மிரட்டல்-போலீஸ் சோதனை
சென்னை: சென்னை புழல் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து போலீஸார் சிறை முழுவதும் சல்லடை போட்டு தேடியும் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அது புரளி என முடிவு செய்யப்பட்டது.
சென்னை அருகே இருக்கும் புழல் மத்திய சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்கள் புரிந்த சுமார் 2 ஆயிரத்து 360 ஆண் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் மற்றும் பெண் கைதிகள் ஆகியோர் உள்ளனர். தண்டனை குற்றவாளிகள் 700 பேர் முதல் பிரிவிலும், விசாரணை கைதிகள் 1500 பேர் இன்னொரு பிரிவிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 160 பெண்கள் இன்னொரு இடத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு புழல் சிறை அதிகாரிக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் இன்னும் 30 நிமிடத்தில் புழல் சிறை வெடித்து தூள்தூளாகும், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சிறை துறை அதிகாரிகள், சென்னை புறநகர் கமிஷ்னர் ஜாங்கிட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் சிறை முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
மறுநாள் அதிகாலை 2 மணி வரை நீடித்த இந்த சோதனையின் இறுதியில் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த போன் புரளி என்பது தெரியவந்தது. போலீஸ் போன் எண்ணை வைத்து பேசியது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் விபசார வழக்கில் கைதான நடிகை புவனேஸ்வரியும் இங்கு தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications