மனநிலை பாதித்த பெண்ணிடம் பலாத்காரம்-வக்கீல் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாட்ஜில் அடைத்து வைத்து மானபங்கம் செய்ய முயன்ற வக்கீலை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள கருகலா கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மனைவி அனிதா. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.
நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அனிதா வள்ளியூர் பேருந்து நிலையம் வந்தார். பின்னர் வீடு திரும்ப நினைத்தார். ஆனால், அங்கு எந்த பஸ்சில் ஏறி எப்படி வீட்டுக்கு செல்வது என தெரியாமல் பேருந்து நிலையத்தையே திரும்ப திரும்ப சுற்றி வந்தார்.
அவர் நேற்று நள்ளிரவு 11 மணியாகியும் அங்கேயே அமர்ந்து இருந்தார். அப்போது பணகுடியை சேர்ந்த பிரபல வக்கீல் வரதராஜன் என்பவர் அங்கு வந்துள்ளார்.
அவர் அந்த பெண்ணை விடுதியில் தங்க வைத்து காலையில் ஊருக்கு அனுப்புவதாக கூறி அருகில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். லாட்ஜில் அனிதா தனது உறவினர் என கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் லாட்ஜில் குளித்து விட்டு வரும்போது வக்கீல் வரதராஜன் அவரை கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மிரண்டு போன அந்த பெண் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதையடுத்து லாட்ஜ் ஊழியர்களும், மேலாளர் ஜஸ்டினும் அந்த அறைக்கு வந்து அந்த பெண்ணை காப்பாற்றினர்.
இதை தட்டி கேட்ட லாட்ஜ் மேலாளரை வக்கீல் வரதராஜன் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து லாட்ஜ் மேலாளர் ஜாஸ்டின் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சப்-இன்ஸ்பெக்டர் உதுமான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வக்கீல் வரதராஜனை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications